இலுப்பூர், ஆக.14: இலுப்பூரில் உள்ள அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் மற்றும் இலுப்பூர் சவுராஷ்ட்ரா தெருவில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் ஆடி புரம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள்கோயில் அலர் மேல் மங்கை தாயார். சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இலுப்பூரில் இப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இப்கோயிலில் ஆடி பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு வளையல் அலங்காரத்தில் அலர் மேல் மங்கை தாயார். பக்தர்களுக்கு அருள் புரிந்தார். திரளாள பக்தர்கள் இந்த வழிபாடு நிகழச்சியில் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.