புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் புனித ஆரோக்கிய மலைமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 35ம் ஆண்டாக புனித ஆரோக்கிய மலைமாதா ஆலய தேர்பவனி கடந்த 3ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கீரனூர் மறைவட்ட அதிபர் அருளானந்தம் தலைமையில் கோயிலில் இருந்து திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து கொடிக்கம்பத்தில் ஏற்றி திருவிழா தொடங்கியது.
இதில் அம்மாசத்திரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.