இலுப்பூர், ஆக.14: இலுப்பூர் மற்றும் பாக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம பெறும் பகுதிகளில் இன்று (14ம் தேதி) மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து இலுப்பூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இலுப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று (14 தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை இத்துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இலுப்பூர், ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு மலைக்குடிபட்டி, மற்றும் கொடும்பாளுர் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது.