தஞ்சை, ஆக. 14: தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2, 3, 4 சக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம், ஆயுதப்படை மைதானத்தில் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதற்காக காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை வாகனங்கள் பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமானவர்கள் 17ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ரூ.1,000த்தை முன்வைப்பு தொகை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.