கீழ்வேளூர்,ஆக.14: குண்டும், குழியுமான நாகை, திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காமல் அவ்வப்போது பழுதடைந்த இடங்களில் பேச் ஒர்க் செய்து தற்காலிக பராமரிப்பு செய்யப்படுவதால் நாகை முதல் திருவாரூர் வரையிலான சாலையில் மஞ்சக்கொள்ளை, பெருள்வைத்தச்சேரி, சிக்கல், ஆழியூர், கீழ்வேளூர், சந்தியாத்தோப்பு, நீலப்பாடி, அடியக்கமங்கலம், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. பேச் ஒர்க் போடப்படும் இடங்களில் அதிக வாகனங்கள் செல்வதால் அந்த இடம் மீண்டும் பழுதாகி குண்டும் குழியுமாகி விடுகிறது. பல இடங்களில் சாலையில் உள்ள குழிகள் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே உள்ளது. இதனால் சாலையில் தற்போது நூற்றுக்கணக்கான குழிகள் ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்ணி, நாகூர் போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிக சுற்றுலா பயணிகள் கார்,