மன்னார்குடி, ஆக. 14: 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான அகில இந்திய திறனாய்வுத் தேர்வு மன்னார்குடியில் நடைபெற்றது ஜேசிஐ இந்தியாவின் வழிகாட்டுதலின் பேரில் ஜேசிஐ மன்னை கிளையால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான அகில இந்திய திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு இந்தியா முழுவதும், ஒரேநாளில், ஒரே நேரத்தில், மாணவர்களின் பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் தேர்வாகும்.