திருவாரூர், ஆக.14: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று கமலாம்பாள் சுவாமிக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கோயிலின் ஆடிப்பூர உற்சவ விழாவானது கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினந்தோறும் மாலையில் கமலாம்பாள் புறப்பாடு நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது.