கரூர், ஆக.14: கிராம சபைக்கூட்டங்களில் ரேஷன்கடை பதிவேடுகள் தணிக்கை செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.பொதுவிநியோகத் திட்ட செயல்பாட்டிலும், நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டிலும், தூய்மையான நடைமுறையை கொண்டுவரும் வகையில் நியாயவிலைக் கடைகளின் பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இத்திட்டம் ஆகஸ்டு 15 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.