கருணாநிதிக்கு அஞ்சலி

சாத்தூர், ஆக. 14: சாத்தூரில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம்  மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி சாத்தூர் முக்குராந்தகல்லியில், கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் திமுக நகரச்செயலாளர் குருசாமி, திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: