கம்பம் மக்கள் புலம்பல் அடிப்படை வசதி கேட்டு மனு

தேனி, ஆக. 14: தேனி நகராட்சி 8 வது வார்டில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி தமிழ்புலிகள் அமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் மாரி தலைமையிலான நிர்வாகிகள் தேனி கலெக்டர் பல்லவிபல்தேவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், பெண்கள் திறந்த வெளிக்கழிப்பிடத்தை பயன்படுத்துவதை நகராட்சி நிர்வாக அனுமதியுடன் சிசிடிவி காமிராவில் கண்காணிக்கபடுகிறது. எனவே இதை தடுத்து நிறுத்தி, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: