கம்பம், ஆக. 14: தேனி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியாக கம்பம் உள்ளது. தமிழக, கேரள எல்லை பகுதியாக கம்பம் உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த நிலையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் பஸ்கள் மற்றும் அரசு வாகனங்களை தவிர வேறு எந்த தனியார் வாகனங்களும் செல்ல போலீசார் தடை விதித்து இதற்கான அறிவிப்பு பலகையும் வைத்தனர். மேலும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு அவ்வாறு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர்.