பொதுமக்கள் எதிர்பார்ப்பு கிராமசபை கூட்டத்திற்கு வக்கீல்கள் நியமனம்

தேனி, ஆக. 14: தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று நடக்க உள்ள  கிராம சபைக்கூட்டங்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத் தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் ஊராட்சிகளில் நடத்தப்படுவது வழக்கம். தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 130 ஊராட்சிகளில் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.  இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்  பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி வட்ட சடடப்பணிகள் சார்பில் வக்கீல்களும், சட்டம் சார்ந்த தன்னார்வலர்களும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: