கொடுமுடி: ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் மற்றும் கொப்பரை விற்பனை நடந்தது. இதில் 98 விவசாயிகள் 16 ஆயிரத்து 1 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவை மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 794க்கு விற்பனையானது. இதேபோல் 12 ஆயிரத்து 940.5 கிலோ கொப்பரைகள் விற்பனைக்கு வந்திருந்தன.