மதுரை, ஆக. 14: மதுரையில் மாநகர அரசு பஸ்களில் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த கூடிய சலுகை கட்டணமான ரூ.50 டிக்கெட் மீண்டும் வழங்க வேண்டும் என கோரி மனு கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மாநகர அரசு பஸ்களில் முன்பு சலுகை கட்டணமாக ரூ.50 டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டை ஒரு நாள் முழுவதும் மாநகர பஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இதனை அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சமீபத்திய பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து ரூ.50 சலுகை கட்டண டிக்கெட்டை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரத்து செய்தது. இதனால், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளனிடம் கோரிக்கை மனு கொடுத்தார், அதில், ‘ரூ.50 கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யும் வசதி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆட்டோவில் ஏறாமல் பொதுமக்கள் பஸ்ஸில் மட்டும் ஏறி இறங்கினர். தற்போது இந்த சலுகை டிக்கெட் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள், பெண்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.