கருணாநிதி மறைவுக்கு வக்கீல் சங்கம் இரங்கல்

மதுரை, ஆக. 14: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு வக்கீல் சங்கத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளை எம்எம்பிஏ வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு சங்க தலைவர் ஏ.கே.மாணிக்கம் தலைமை வகித்து இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.

அதில், தமிழுக்காகவும், சமூக நீதிக்காகவும் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என புகழாரம் சூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில் சங்க செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் மகேஷ் குமாரவேல், வழக்கறிஞரணி நிர்வாகிகள் அன்புநிதி, சதீஷ்குமார், ரவி, திலக்குமார், ராகவேந்திரன், இளங்கோ, பெத்தண்ணசாமி, சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: