நாமக்கல், ஆக. 14: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மவன ஊர்வலம் மோகனூர் ரோட்டில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பூங்கா ரோட்டில் நிறைவடைந்தது.பின்னர் அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் வீரசிவாஜி, சபூர்அகமது, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபோல புதுச்சத்திரம் வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர் சிவக்குமார், செயலாளர் ரமேஷ், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் கண்ணன், நடராஜன், சம்பத், ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருச்செஙகோடு : திருச்செங்கோடு அடுத்த வெள்ளாளப்பட்டியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.திருச்செங்கோடு நகராட்சி 11வது வார்டு வெள்ளாளப்பட்டி அருந்ததியர் தெருவில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருஉருவச்சிலை நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி கலந்துகொண்டு சிலை நிறுவும் பணியை துவக்கி வைத்தார்.