கடலூர், ஆக. 14: கடலூரில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் முஷ்ணம் வட்டத்தூர் கிராம விவசாயிகள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாபதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வீராணம் ஏரியிலிருந்து விஎன்எஸ் மதகு வழியாக திறந்து தண்ணீர் வடக்கே செல்லும் போதெல்லாம் கோதாவரி புது வாய்க்கால் வழியாக தென்புறம் சென்று வட்டத்தூர் குடிகாடு, சோழதரம், புடையூர், கோதண்டவிளாகம் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு பயிர்கள் சுமார் 300 ஏக்கர் நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகிறது. இது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.