வேலூர், ஆக.14:வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி முக்கிய இடங்களில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று மாலை தொடங்கி நாளை மறுதினம் வரை ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் 72வது சுதந்திர தினவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோயில்கள் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.