மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை இயக்குநரிடம் மனு

விருத்தாசலம், ஆக. 13: தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட மருந்தாளுநர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கரன் தலைமையில் அச்சங்கத்தினர் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கடலூர் மாவட்டத்தில் மருந்தாளுநர், தலைமை மருந்தாளுநர், மருந்துகிடங்கு அலுவலர் பணியிடங்கள் புதியதாக உருவாக்கி மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு சார்பில் நடைபெறும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் மருந்தாளுநர்களின் சார்பில் ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், ஏழுமலை, பொருளாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: