விருத்தாசலம், ஆக. 13: தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட மருந்தாளுநர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கரன் தலைமையில் அச்சங்கத்தினர் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கீதாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கடலூர் மாவட்டத்தில் மருந்தாளுநர், தலைமை மருந்தாளுநர், மருந்துகிடங்கு அலுவலர் பணியிடங்கள் புதியதாக உருவாக்கி மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.