தஞ்சை, ஆக. 13: தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பாஜ மாநில இளைஞரணி துணை தலைவர் சதீஷ்குமார் போன்ஸ்லே தலைமை வகித்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன், மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் 150 பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன் கூறுகையில், கண் பாதிப்பு பிறவி கோளாறினாலும், மாலை கண் நோயினால் தான் வருகிறது. உலகளவில் 35 மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.