ஆலங்குடி, ஆக.13: ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் உடனுரை அரங்குளநாதர் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.விழாவினையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்பாளை எழுந்தருளச்செய்து நான்கு வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தது. விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.