புதுக்கோட்டை, ஆக.13: புதுக்கோட்டையில் போஸ் மக்கள் பணியகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போஸ் மக்கள் பணியக தலைவரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மகனுமான ஜெய் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிட வாய்ப்பு உள்ளது. திருவாரூரில் நடக்கும் இடைத்தேர்தலில் தலைமை உத்தரவிட்டால் நான் போட்டியிடுவேன். தினகரன், ஏழரை நாட்டு சனி எங்களுக்கு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். எங்களுக்குத்தான் ஏழரை நாட்டு சனி முடிந்து விட்டது. ஆனால் அவருக்கு தொடங்கியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தினகரனிடம் பவர் செக்டாராக 122 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியை ஒப்படைத்து விட்டு சென்றார்.