கருணாநிதி மறைவு ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மவுன ஊர்வலம்

ஜெயங்கொண்டம், ஆக.13: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மவுன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தருமதுரை தலைமை வகித்தார். அமைதி ஊர்வலம் வாரியங்காவல் பேருந்து நிறுத்தம் அண்ணா சிலையில் துவங்கி அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக இலையூர் பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. இலையூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த  கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில்  தலைமை செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரங்கமுருகன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதிராஜேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்  அறிவழகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் சஞ்சீவிகுமார் , மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related Stories: