தோகைமலை, ஆக.13: திமுக தலைவர் கருணாநிதி இறப்பை தாங்க முடியாமல் மாரடைப்பால் இறந்த 2 பெண்கள் உள்பட 5 திமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு திமுக எம்எல்ஏ ராமர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கரூர் மாவட்டம் குளித்தலை வடசேரியை சேர்ந்த கருப்பண்ணன், மருதூர் துரைசாமி, நெய்தலூர் தமிழ்ராணி, பனையூர் பாலமுத்து, புனவாசிபட்டி சரோஜா ஆகிய 5 பேர் திமுக தலைவர் கருணாநிதி இறப்பை தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் மாரடைப்பு ஏற்பட்டு மணப்பாறையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்டிமலை அழகாபுரியை சேர்ந்த திமுக தொண்டர் நடராஜன் என்பவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.