மதுரை, ஆக. 13: காப்பீடு திட்டத்துடன் ஆதார் இணைப்பு பணி ெசய்ததற்கு தர வேண்டிய ரூ.4.35 லட்சத்தை தராமல் மோசடி செய்த சப்-ஏஜெண்டுகள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் சபரிநாதன். இவர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி பிராசஸ் பணியை பிரைவேட்டாக செய்து வருகிறேன். என்னிடம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் மதுரை பீபிகுளம் மூவேந்தர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (33), சப்பாணி கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக்குமார் (40), ஆறுமுகத்தின் தந்தை சேது (56) ஆகியோர் அறிமுகமாகினர். இவர்கள் டேட்டா மானேஜ்மெண்ட் சர்வீசஸ் நடத்துவதாகவும், அதில் சைல்டு ஆதார் என்ட்ரோல்மெண்ட் பிராசஸ் என்ற அரசு புராெஜக்ட் செய்து வருவதாகவும், அதே திட்டப்பணியை நெல்லை மாவட்டத்தில் எனக்கு பெற்றுத்தருவதாகவும் கூறினர். அந்த புராஜக்ட் ெசய்ய மொபைல் டேட்லெட், டிவைசஸ் வாங்க ரூ.1.25 லட்சம் செலுத்துமாறு கூறினர். அதனை நம்பி, பணம் கொடுத்தேன். வேலையையும் துவங்கினேன். அப்போது அந்த புராெஜக்ட் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என கூறினர். இது குறித்து ஆறுமுகம், கார்த்திக்குமாரிடம் கேட்ட போது, வேறு புராெஜக்ட் ெபற்றுத்தருவதாக கூறினர்.