வேலூர், ஆக.9: கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களின் பதிவுகளை ராஜஸ்தான் காவல்துறையை போல் பேரணாம்பட்டு காவல்நிலைய போலீசார் பின்பற்றுகின்றனர். நாடு முழுவதும் 15,000 காவல் நிலையங்களுக்கும் மேல் உள்ளது. இந்த காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை என்று ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் ஒவ்வொரு விதமாக ஆவணங்கள் கையாளப்படுகிறது.இதில் ராஜஸ்தான் மாநில காவல்துறை கையாளும் ஆவணங்கள் விரிவாக இருப்பதால், தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், காவல்நிலையங்களில் பயன்படுத்தும் கையேடுகள் போன்றவற்றை, ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் பயன்படுத்தும் ஆவணங்களை போல் பயன்படுத்த தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.