காளஹஸ்தி, ஆக.7: சித்தூர் அருகே ஆட்டோவில் தவறவிட்ட பர்சை நேர்மையுடன் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டினர்.
சித்தூர் மாவட்டம், குரபல கோட்டா மண்டலம், சிங்கண்ணகாரிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் மமதா. இவர் தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் அணிந்திருந்த கம்மலை அடகு வைப்பதற்காக கடந்த 3ம் தேதி மதனபல்லி வந்தார். மதனபல்லியில் உள்ள ஒரு அடகு கடையில் கம்மலை அடகு வைத்து ரூ21,500 பெற்று, ராஜேஷ் என்பவரின் ஆட்டோவில் ஏறி மதனபல்லி அரசு பஸ் நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து பஸ்சில் சிங்கண்ணகாரி பல்லிக்கு சென்று விட்டார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக டிரைவர் ராஜேஷ் பெங்களூருவுக்கு சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் இரவு வீடுதிரும்பினார். தொடர்ந்து நேற்று தனது ஆட்டோவை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.