பேராவூரணி, ஜூன் 21: மயிலாடுதுறையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின்போது கைதான பாஜ நிர்வாகிகளை விடுவிக்க கோரி பேராவூரணியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.முத்துப்பேட்டையில் மீன் மார்க்கெட்டை அகற்ற வலியுறுத்தி நேற்று பாஜக நடத்திய உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தஞ்சை மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ, பேட்டை சிவா உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.