கும்பகோணம், ஜூன் 21: வன்கொடுமை சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்தியதை எதிர்த்து வரும் ஜூலை 2ம் தேதி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ள ரெயில் மறியல் போராட்டம் குறித்த ஆயத்த கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழ உறுப்பினர் சின்னை பாண்டியன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,இதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் திருத்தியதை எதிர்த்து வரும் ஜூலை 2 ந்தேதி கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்வது, அன்று அனைத்து கட்சி சார்பில் ஏராளமானோர் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.