கும்பகோணம், ஜூன் 21: கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் வெளிநாடுகளுக்கு பதிவு தபால், பதிவு பார்சல்கள், விரைவு தபால் அனுப்புவதற்கான சிறப்பு கவுண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கும்பகோணம் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் துரைசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வெளிநாடுகளுக்கு பார்சல், விரைவு தபால்களை சிரமமின்றி பொதுமக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்புவதற்கான சிறப்பு கவுண்டர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளுக்கு பேக்கிங் செய்வதற்கு கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு பார்சல் சர்வீஸ் சென்டர் இயங்கி வருகிறது.