வேதாரண்யம், ஜூன் 21: வேதாரண்யம் பகுதியில் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த 10 பேரை பிடித்து முகாமுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.வேதாரண்யம் நகரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் அரைகுறை ஆடையுடன் சுற்றி வந்தனர். மேலும் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து பொதுமக்கள் மீது எரிந்து வந்தனர். இதுகுறித்து நாகை கலெக்டர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு கோரிக்கை மனு அனுப்பினார். அதில் வேதாரண்யம் பகுதியில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.