மதுரை, ஜூன் 21: மதுரையில் குழந்தைகளுடன் இளம்பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேரந்த முருகன். இவரது மனைவி பழனிச்செல்வி (27). இவர்களுக்கு சத்தியபிரியா (6), பெரியநாச்சி (3) என குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் பழனிச்செல்வி தனது குழந்தைகளுடன் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள இடையபட்டிக்கு வந்தார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் காணவில்லை. முருகன் புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.