நாகை, மே 26: கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் நேற்று 4வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி அஞ்சல் ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கமலேஷ் சந்திர கமிட்டியின் பரிந்துரைகளை ஒப்பந்த ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று 4வது நாளாக காலை அஞ்சல் மூன்று கோட்ட செயலாளர் விஜயராகவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.