நாகை, மே 26: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 14 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட அரசு பணியாளர் சங்கம் சார்பில் நேற்று நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தாசில்தார், துணை தாசில்தார் பணியாளர் சங்க மாநில தலைவர் குமார், அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார். ஜாக்டோ ஜியோ சார்பில் நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், ரவி, சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.