சேலம்:சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர், சேலம் 4 வது நீதித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2022 மார்ச் 1ம் தேதி நீதிமன்ற அலுவலகத்தில் இருந்த மாஜிஸ்திரேட் பொன்பாண்டியை உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்தியுள்ளர். அஸ்தம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், பிரகாஷ் மேட்டூரில் இருந்து ஓமலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், சேலம் நீதிமன்றத்திற்கு உடனடியாக அவர் மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்றுதான் ஊழியர் பிரகாஷ், சேலம் நீதிமன்றத்தில் பொறுப்பேற்றார். தன்னை தொடர்ந்து மாற்றுவதால் ஆத்திரம் அடைந்த அவர் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்தியது தெரியவந்தது.