மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு ஸ்பெயினில் உள்ள வாலன்சியா மற்றும் அரகோன் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால், வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.