நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சீக்கிய குருத்வாராவில் 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் சாக்ராமென்டோவில் குருத்வாரா உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பிரார்த்தனை நடந்த போது அங்கு இருந்த 2 பேர் திடீரென மோதிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.