அமெரிக்க குருத்வாராவில் 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சீக்கிய குருத்வாராவில் 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் சாக்ராமென்டோவில் குருத்வாரா உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு  பிரார்த்தனை நடந்த போது அங்கு இருந்த 2 பேர் திடீரென மோதிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

அதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவத்தை பார்த்த மற்றொருவர் அங்கு வந்தார். அவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பின்னர் துப்பாக்கியால் சுட்டவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.  படுகாயம் அடைந்த 2 பேரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: