புதுடெல்லி: தமிழ்நாட்டில் திருமழிசை உள்பட 21 மாநிலங்களில் இருந்து 26 புதிய நகரங்களை உருவாக்க பரிந்துரை வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மாநிலங்களவையில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித்துறை இணை அமைச்சர் கவுசால் கிஷோர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: நாட்டில் நகர்ப்புற விரிவாக்கத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய நகரங்களை உருவாக்க 21 மாநிலங்களிடமிருந்து 26 பரிந்துரைகள் வந்துள்ளன. ஆனால் 15 வது நிதி ஆணையம் 8 புதிய நகரங்களை உருவாக்க ரூ. 8,000 கோடியை ஒதுக்கியுள்ளது . இதன் மூலம் ஒவ்வொரு புதிய நகரத்திற்கும் கிடைக்கும் தொகை ரூ 1,000 கோடி ஆகும். இந்த நிதியின் மூலம் ஒரு மாநிலம் ஒரு புதிய நகரத்தை மட்டுமே உருவாக்க முடியும்.