செய்யூர்: மணப்பாக்கம் பகுதியில் ஆபத்தானநிலையில் காணப்படும் டிரான்ஸ்பார்மரை மாற்றி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டில் இருந்து தொழுப்பேடு செல்லும் வழியில் மணப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு நெடுஞ்சாலையோரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.தற்போது, டிரான்ஸ்பார்மர் பழுதாகி சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
