கீவ்: சீனா மற்றும் ஜப்பான் தலைவர்கள் ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில்,ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திடீரெனுக்கு உக்ரைனுக்கு விஜயம் செய்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய கிஷிடா புச்சா நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் போரில் உயிரிழந்தவர்களுக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கிஷிடா,‘‘ இந்த கொடிய தாக்குதலில் தங்களுடைய நெருங்கிய உறவுகளை இழந்தவர்களுக்கு என்னுடைய அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.