பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் பிலிவர்ஸ் சர்ச் அமைந்துள்ளது. இங்கு மத போதகராக நாகர்கோவில் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டான்லிகுமார் (49) உள்ளார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண், ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘3 குழந்தைகளின் தாயான மூத்த மகள் விருதுநகரில் வசித்து வருகிறார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த மகளை, சிவகாமிபுரம் பிலிவர்ஸ் சர்ச்சுக்கு அழைத்து சென்று, மத போதகர் ஸ்டான்லிகுமாரிடம் ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர், எனது மகளை 3 நாள்கள் சர்ச்சில் தங்க சொன்னார்.