மதுபான கொள்கை முறைகேடு சிசோடியாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 25 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது காவல், நேற்றுடன் நிறைவடைந்ததால், அமலாக்கத்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால், சிசோடியாவை ஏப்ரல் 5 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

Related Stories: