பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே உள்ள கொடிவலசா காலனியில் தனியார் பள்ளி பின்புறம் மலைப்பகுதியில், காரில் செம்மரம் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் இளங்கோ, போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.