அபுதாபி: அபுதாபியில் சாதனை பெண்களை கவுரவிக்கும் ‘புதுமை தமிழச்சி’ நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்றார். அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாசார மையத்தில் சாதனை பெண்களை கவுரவிக்கும் புதுமை தமிழச்சி என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் கலந்துகொண்டார்.