வாஷிங்டன்: அமெரிக்காவின் வெளிவிவகார துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டறிக்கையில், ‘ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா, மியான்மர் போன்ற நாடுகளில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் 2022ம் ஆண்டில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், பத்திரிகை சுதந்திரம், மத மற்றும் இன சிறுபான்மையினரை குறிவைக்கும் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன.