பாங்காக்: தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வரும் மே மாதம் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஒச்சா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ராணுவத்தின் ஆதரவுடன் இவர் மீண்டும் பிரதமரானார். இன்னும் சில நாட்களில், இவர் ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைய உள்ளதால், தாய்லாந்தில் மீண்டும் பொது தேர்தல் நடைபெற உள்ளது.