புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. மொத்தம் 76 மாதிரிகளில் உருமாறிய எக்ஸ்பிபி.1.16 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில தான் உருமாறிய எக்ஸ்பிபி.1.16 கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் பல மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் எடுக்கப்பட்ட மாதிரிகளின்படி இந்த புதிய உருமாறிய வைரசினால் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் கர்நாடகாவில் 30 ,மகாராஷ்டிரா 29 , புதுச்சேரி 7 , டெல்லி 5 , தெலங்கானா 2 ,குஜராத், இமாச்சல் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒருவரும் புதிய வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.