புவனேஸ்வர்: ஒடிசாவில் டிரைவர்கள் ஸ்டிரைக்கால் மணப்பெண் வீட்டிற்கு 28 கிமீ நடந்து சென்று மணமகன் தாலி கட்டினார். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒடிசாவில் இன்சூரன்ஸ், ஓய்வூதியம், நல வாரியம் அமைத்தல் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை வலியுறுத்தி டிரைவர்கள் சங்கம் ஸ்டிரைக் நடத்தியது. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான டிரைவர்கள் பங்கேற்றனர். ராயகடா மாவட்டத்தில் ஒரு திருமணத்திற்காக மணமகன் வீட்டார் வாகனம் ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் டிரைவர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வராததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.