ஒடிசாவில் உளவு புறா சிக்கியது

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம்  பூரி மாவட்டம் அஸ்தராங் பகுதியின் நன்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் இருந்த புறாவின் கால்களில் ஏதோ பொருள் இருந்துள்ளது. இதை உள்ளூர்வாசி ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகம் அருகே மீன்பிடி படகில் கால்களில் கேமரா, மைக்ரோசிப்புடன் ஒரு புறா பிடிபட்டது.  இது சீனாவிலிருந்து உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இந்நிலையில் ஒடிசாவில் மற்றொரு உளவு புறா பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: