பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் தஞ்சாவூருக்கு வாரந்திர சிறப்பு ரயில் சேவை வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடைகால விடுமுறை சமயத்தில் மக்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயணம் செய்ய வசதியாக கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில் சேவை வரும் 20ம் தேதி முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
அதன்படி எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து (வண்டிஎண் 07325) மார்ச் 20, ஏப்ரல் 3, 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளி்ல் காலை 8.25 மணிக்கு புறப்பட்டு ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவணகெரே, பீரூர், அரசிகெரே, துமகூரு, சிக்கபாணவார், சர்.எம்.விஷ்வேஸ்வரய்யா பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திருச்சி கோட்டை, திருச்சி சந்திப்பு, பூதலூர் வழியாக 2.15 மணிக்கு தஞ்சாவூர் சந்திப்பு சென்றடையும்.